
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் உலகக்கோப்பையை நழுவவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர்காக குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோர் தேர்வுசெய்யப்படலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.
அதேசமயம் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக உருவெடுத்த யுஸ்வேந்திர சஹால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக 2022ஆம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட யுஸ்வேந்திர சாஹல், அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் போனது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதனால் இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலாவது சஹால் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து.