
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகளும் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி இரண்டு வாரங்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், முகேஷ் குமார், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் ஓப்பனிங் இடத்திற்கு கில், இஷான் கிஷன், ருத்துராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கின்றனர். யார் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும்? பிளேயிங் லெவனில் யார் யார் இருக்கவேண்டும்? என்கிற கணிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஓப்பனிங்கில் கில் அல்லது ஜெய்ஸ்வால் இருவரில் யார் களமிறங்க வேண்டும்? பிளேயிங் லெவன் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவுடன் ஓபனிங்கில் சுப்மன் கில் களமிறங்க வேண்டும். அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார். கடுமையான போட்டிக்குப் பிறகு தொடர்ந்து ஓப்பனிங்கில் இறங்கி வருகிறார்.