Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Advertisement
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2024 • 12:29 PM

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2024 • 12:29 PM

குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Trending

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமர் யாதவும் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனும் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும், நிதீஷ் குமார் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து அதிகமுறை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி மற்று ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 4 முறை சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா 5 முறை சிக்ஸர் முலம் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன் இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தலா 3 முறை சிக்ஸர் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement