
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா 43 ரன்களையும், அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் 35 ரன்களையும், ராதா யாதவ் 9 ரன்களையும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை அருந்ததி ரெட்டியும் சேர்த்தனர்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிக்கி பிரசாத் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டில் மும்பை அணி தோல்வியடைந்தாலும், அந்த அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.