
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் வரும் 10ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன.ஆடவா் கிரிக்கெட் போட்டிகளைப் போல் மகளிா் கிரிக்கெட்டும் தற்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. 14 ஆண்டுகளாக மகளிா் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கையும், குரூப் 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நியூலேண்ட்ஸ் கேப் டவுன், பாா்ல் போலண்ட் பாா்க், ஜெபா்ஹா செயின்ட் ஜாா்ஜ் பாா்க் ஆகிய மைதானங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.