இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷித் ராணா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஹர்ஷித் ராணா தற்போது அணியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெலியான தகவலின் அடிப்படையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று பர்மிங்ஹாம் சென்றுள்ளனர். இதில் ஹர்ஷித் ராணா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அணியுடன் பர்மிங்காமுக்கு செல்லவில்லை. இதனால் ஹர்ஷித் ராணா நாடு திரும்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா, இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் அவர் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், ரன்களையும் வாரி வழங்கி இருந்தார். இதுபோன்ற சூழலில் தான் ஹர்ஷித் ராணா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் பயணிப்பார் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
Also Read: LIVE Cricket Score
மேலும் இந்திய ஏ அணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுப் கம்போஜிற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்ட பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் கௌதம் கம்பீரின் தலையீட்டின் காரணமாக ஹர்ஷித் ராணாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், இதனால் கவுதம் கம்பீர் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now