Advertisement

டி20 அணியிலிருந்து வெளியேற்றப்படும் சீனியர் வீரர்கள்; பிசிசிஐ அதிரடி முடிவு?

2023ஆம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 29, 2022 • 19:41 PM
Have We Seen The Last Of Kohli and Rohit In T20IS?
Have We Seen The Last Of Kohli and Rohit In T20IS? (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் ஜெயித்தது.

இந்திய அணி தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் தோற்ற விதம் படுமோசமானது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வி அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி பவர்ப்ளேயில் அதிரடியாக விளையாடி ஸ்கோர் செய்யாதது, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தாதது ஆகிய இரண்டும் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.

Trending


டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம். 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது, இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இளம் அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, அதிரடி வீரர்களை அணியில் எடுத்து, ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.

எனவே சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு டி20 கெரியர் முடிந்துவிட்டது என்று பேசப்பட்டது. இதுகுறித்து டி20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுகுறித்து கருத்து கூற இது சரியான நேரம் கிடையாது என்று பதிலளித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “சீனியர் வீரர்கள் யாரையும் ஓய்வு அறிவிக்குமாறு பிசிசிஐ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் 2023ஆம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். ஓய்வு அறிவிப்பது அவர்களின் முடிவு” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement