இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்ற நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் இப்போது இருந்து ஆரம்பமாகிவிட்டன . இரு அணி வீரர்களும் இந்த டெஸ்ட் தொடர்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியினர் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தரமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுவாக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான தொடர்களில் காணப்படும் கருத்து யுத்தங்களும் இப்போதே ஆரம்பமாகி விட்டன . ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக விளையாடக்கூடிய ஒரு திறமையான வீரர் . அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்களும் வல்லுனர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் .
ஆனால் ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “ஸ்டீவன் ஸ்மித்தை விட இவரிடம் பல விதமான ஷாட்டுகள் இருக்கின்றன. இதனால் இந்திய அணி இவருக்கு எதிரான திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.