
‘He is exemplary but one player does not make up a team’ – PBKS owner Ness Wadia (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது,
இந்நிலையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் 15-ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த அணிகளின் ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை மையமாக வைத்து 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விரைவில் அணி வீரர்களுக்கான ஏலமும் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்த வேலைகளை செய்து வருகிறது.