
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பது முறை இணைந்து 685 ரன்கள் அடித்திருக்கிறார்கள். இதில் சராசரி 76.1 ஆகும்.
இந்த நிலையில் ஷுப்மன் கில் அளித்துள்ள பேட்டியில், “ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். ஏனென்றால் பந்துவீச்சாளர்களின் கவனம் முழுவதும் ரோகித் சர்மா மீது தான் இருக்கும். ரோகித் சர்மா எப்போதுமே மற்ற வீரர்கள் அவர்களுடைய திறமையை முழுசாக வெளிப்படுத்தி விளையாடுவதற்கு உறுதுணையாக நிற்பார்.