
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பேட்டர்கள் சொதப்பினாலும் பந்துவீச்சில் தனி ஒருவனாக ஆஸ்திரேலிய பெட்டர்களை திணறடியத்த ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியனார். இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும், இத்தொடருக்கான தொடர்நாயகன் விருதை வென்றார். அதிலும் குறிப்பாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தால் அவதிப்பட்டார்.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் பந்துவீச முடியாமல் போனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அப்போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து பும்ராவின் காயம் எவ்வளவு தீவிரமடைந்துள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகததால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.