
இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ 3 விக்கெட்களும், ஃபர்குசன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.