
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை.டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பிறகு, தோல்விக்கான காரணங்களை கூறி, சில இந்திய வீரர்களை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தோல்விக்கு முதல் காரணமாக ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் இருக்கிறது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் தடவி தடவி ரன்களை சேர்த்ததால், இந்தியா பவர் பிளேவில் சராசரியாக 6 ரன்களை மட்டுமே இத்தொடரில் அடித்திருக்கிறது. அடுத்து, சீனியர் பந்துவீச்சாளர் சிறப்பாக சோபிக்காமல் இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் தொடக்க வீரர்கள் இப்படி சொதப்பும் பட்சத்தில், அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிடும். இதனால், சரியான தொடக்க வீரர்களை தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு இருக்கிறது.