இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்பொழுது தொடரில் முன்னிலை வகிக்கிறது. நடத்த முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வழக்கமான இந்திய அணியின் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக இருந்து வந்த இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டு தன்னை மூன்றாவது இடத்திற்கு பேட்டிங்கில் கீழே இறக்கிக் கொண்டார்.
கில் உடைய இடத்திற்கு இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஈழம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு விளையாட வைக்கப்பட்டார். அவர் தனது முதல் வாய்ப்பிலேயே 350க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர் கொண்டு 171 ரன்கள் குவித்து அசத்தலான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளத்தில், நின்றால் மட்டுமே ரன்கள் வரும் இல்லை என்றால் கடினம் என்கின்ற சூழல்தான் இருந்தது. அப்படியான ஒரு நிலையில் மூன்றாவது வீரராக வந்த கில் ஆறு கண்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஆசியாவுக்கு வெளியே அவர் ஆறு ஏழு போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளை விட, முதல் வாய்ப்பில் ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.