
ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வந்தாலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக ஆடி வந்த பிறகு தான், சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. அதிலும் குறிப்பாக, சில ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவே இல்லை.
இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்து வரவே, சூர்யகுமார் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். கடைசியில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார்.
தொடர்ந்து, இந்திய அணியின் அனைத்து தொடர்களிலும் இடம்பெற்று வரும் சூர்யகுமார் யாதவ், சிறந்த மிடில் ஆர்டர் வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சூர்யகுமார் யாதவ் தற்போது ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில், தனியாளாக போராடி, மும்பை அணியை வெற்றி பெற செய்திருப்பார் சூர்யகுமார்.