Advertisement
Advertisement
Advertisement

அக்‌ஷர் படேலை வைத்து நான் முக்கிய திட்டங்கள் உள்ளன - ரிக்கி பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த் இல்லாத சூழலில் அக்‌ஷர் பட்டேலை வைத்து முக்கிய திட்டங்களை போட்டுள்ளதாக ரிக்கிப் பாண்டிங் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 15, 2023 • 16:34 PM
How Ricky Ponting Helped in Axar Patel's Rise as a Solid Batter!
How Ricky Ponting Helped in Axar Patel's Rise as a Solid Batter! (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கேற்றார் போல அணிகளுடைய சொந்த மைதானங்களில் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் பயிற்சியை தொடங்கிவிட்டன. இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை தவிர அனைத்து வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தான் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த ரிஷப் பந்த் விபத்து காரணமாக விளையாட முடியாத சூழலில் இருக்கிறார். டேவிட் வார்னர் அடுத்த கேப்டனாக செயல்படுவார் எனத்தெரிகிறது. எனினும் மிடில் ஆர்டரில் எப்படி பந்த்தை போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பப்போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்‌ஷரை வைத்து திட்டம் தீட்டியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங்.

Trending


இதுகுறித்து பேசியுள்ள அவர், “அக்‌ஷர் பட்டேலை எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். மும்பை அணியில் சிறு பையனாக இருந்த போது இருந்தே பார்த்து வருகிறேன். கடந்த 2 வருடங்களாக அக்‌ஷர் பட்டேலின் பேட்டிங் திறமை வேற லெவலிற்கு சென்றுள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெளிகாட்டாமல் இருந்து வந்துள்ளார். மேலும் சில மாற்றங்களை மட்டும் செய்தால் மிகச்சிறப்பாக விளையாடுவார்.

அக்‌ஷர் பட்டேலுக்கு ஷார்ட் பால்கள் பலவீனமாக இருக்கும். அதுவும் உடலுக்கு நேராக வரும் ஷார்ட் பந்துகளை அவர் எதிர்கொள்ள திணறுகிறார். அவரை நன்கு ஆஃப் சைட் திசையில் நகர்ந்து விளையாடுவதற்கு தயார் செய்து வருகிறோம். இதனால் எந்தவித சிக்கலும் இன்றி விளையாடலாம். இந்தாண்டு அவரிடம் இருந்து இன்னும் நிறைய பேட்டிங்கை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு மிகவும் பக்கபலமாய் இருந்தது அக்‌ஷர் பட்டேல் தான் 5 இன்னிங்ஸ்களில் 264 ரன்களை குவித்துள்ளார். இந்த தொடரில் அதிக ஸ்கோர் அடித்த 2ஆவது வீரர் இவர் தான். முன்னணி வீரர்களே தடுமாறிய போதும், அக்‌ஷர் பட்டேல் 3 அரைசதங்களை அடித்து கவனம் ஈர்த்தார். எனவே இனி வரும் போட்டிகளிலும் அவருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும் எனத்தெரிகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement