
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக தொடங்குகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரை சமன் செய்து, ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா இத்தொடரையும் வென்று மிகப்பெரிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
ஏனெனில் சவாலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரையாவது வென்றுள்ள இந்தியா 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது கிடையாது. அதிகபட்சமாக 2010இல் எம்எஸ் தோனி தலைமையில் தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக 2021/22இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
எனவே அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக போராட தயாராகியுள்ள இந்திய அணியில் இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சாதாரண வீரராக விளையாட உள்ள விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்த அவர் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.