என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
!['Huge Thing': Sanju Samson Opens Up On T20 World Cup Selection என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/sanju-centy-lg.jpg)
ரோஹித் சர்மா தலைமையிலான் இந்திய அணியானது நாளை நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாப் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுந்து வந்தன. அதேசமயம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனுக்கு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Trending
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தயாரான அல்லது அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனாக இப்போது என்னை நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 10ஆண்டுகளாக நான் நிறைய தோல்விகளையும், அதில் ஒருசில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இந்த தொடருக்கு முன்னதாக வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரானது எனக்கு நிறைய உதவிசெய்துள்ளது. ஏனெனில் அத்தொடரில் நான் செய்வதற்கு நிறைய இருந்தது. மேலும் அணியின் கேப்டனாக இருப்பதால், என் மனம் எப்போதும் போட்டியின் மீது கவனத்தை செலுத்தினாலும், அதில் ஒரு பகுதியானது உலகக்கோப்பை தொடருக்கான தேர்வு குறித்த சிந்தனையும் ஓடிக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய விஷயம், என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.
அந்த எண்ணங்கள் மனது ஓடிக்கொண்டே இருந்தன. ஐபிஎல் தொடரில் எனக்கு ஒரு நல்ல சீசன் இருந்தது, அங்கு நான் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில், அது எவ்வளவு கடினமானது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அணி என்ன விரும்புகிறது, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் எந்தவகையான சரியான கலவையைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
அதனால் 'ஆமாம், சஞ்சு நீ ரெடி' என்று எனக்கு நானே உறுதியாக நம்பினேன். அதற்கேற்றது போலவே வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு திருப்பி கொடுத்துள்ளது. இத்தொடருக்காக மனதளவில், நான் என்னை ஊக்குவிக்க வேண்டியதில்லை. தானாகவே, விஷயங்கள் நடக்க வேண்டும், அது நடந்து கொண்டும் இருக்கிறது. மேலும் நான் எங்கு சென்றாலும் எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now