-mdl.jpg)
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 9 லீக் போட்டிகளிலும் வென்று அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இதன் மூலம் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்கு இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டெரில் மிட்சேல் 134 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இந்த வெற்றிக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அப்போட்டியில் 47 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்து அவுட்டான பின் தம்முடைய பங்கிற்கு அட்டகாசமாக விளையாடிய சுப்மன் கில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 80* (66) ரன்கள் எடுத்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.