ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!
ஒரு கேப்டனாக, ஏற்கனவே ஓவர் ரேட் பெனால்டியைச் சமாளித்த, உங்கள் ஃபீல்டை சரி செய்யும் போது மற்றொரு வீரர் நுழைவது வெறுப்பாக இருக்கலாம் என ஹர்மன்பிரீத் - எக்லெஸ்டோன் மோதல் குறித்து முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மம்ப்ரீத் கவுர் யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டொனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யுபி வாரியர்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீச முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணிக்கு அபராதமாக 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என நடுவர்கள் கூறினர்.
Trending
இதனால் அதிருப்தியடைந்தா ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பந்துவீச்சாளர் அமெலியா கெர் ஆகியோர் கள நடுவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பேட்டிங் செய்ய களத்தில் இருந்த யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனும் நடுவரிடம் ஏதோ கூற, அதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு எக்லெஸ்டோனும் கோபமாக பதிலளிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அதன்பின் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். மேற்கொண்டு இருவரும் மோதலி ஈடுபட்ட காணொளியும் இணையத்தி வைரலாகியது. இதனையடுத்து கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டாதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்படுவதாக டபிள்யூபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ்,"இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஓவர் ரேட்டில் நான்கு நிமிடங்கள் பின்தங்கியிருப்பதாக நான் நம்புகிறேன், அதாவது அவர்கள் கூடுதல் பீல்டரை 30 யார்ட் வட்டத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தது - அதனால் அவர்களால் மூன்று வீராங்கனைகளை மட்டுமே பவுண்டரி எல்லையில் நிற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஹர்மன்ப்ரீத் நடுவருடன் இதைப் பற்றி விவாதித்து, ஸ்லோ ஓவர் ரேட் குறித்து முன்பே அறிந்திருந்தால் ஷப்னிம் இஸ்மாயிலை 19ஆவது ஓவரை வீச பரிந்துரைத்திருப்பார். ஆனால் அந்த நேரத்தில் சோஃபி எக்லெஸ்டோன் அங்கு என்ன செய்ய முயற்சித்தார் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் ஒரு கேப்டனாக, ஏற்கனவே ஓவர் ரேட் பெனால்டியைச் சமாளித்த, உங்கள் ஃபீல்டை சரிசெய்யும்போதும், மற்றொரு வீரர் நுழைவது வெறுப்பாக இருக்கலாம்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் இப்போட்டியில் சோஃபி எக்லெஸ்டோனிடம் ஹர்மன்ப்ரீத் கவுர் அப்படி நடந்து கொண்டது வெறும் உணர்ச்சியின் தருணம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்த செயல் ரசிகர்களையும் கோபமடைய செய்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயலுக்கு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now