
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எதிவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடங்களை யார் நிரப்புவார்கள், இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், விராட் கோலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் கவர்ச்சியை இழந்திருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிவுள்ளார்.