
16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதோடு தோனி கேப்டனாக தனது 5 ஆவது கோப்பையை கைப்பற்றி ரோஹித் சர்மாவுடன் அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைய கிரிக்கெட் உலகம் மிகவும் வித்தியாசமானது. தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு அவருக்கு மூட்டு பகுதியில் காயம் இருந்தாலும் அவர் இந்த தொடரில் விளையாடி முடித்து விட்டார். அதேவேளையில் தோனியை போன்ற இடத்தில் நீங்கள் இல்லை. உங்களுடைய நிலை வேறு ரோஹித் சர்மா என்ற நீங்கள் தான் இந்திய அணியின் கேப்டன். எனவே வீரர்களுக்கு அனைத்து துறைகளிலுமே நீங்கள் தான் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக உங்களுடைய பிட்னஸ்ஸில் நீங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்.