Advertisement
Advertisement
Advertisement

சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!

ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்கிறார்கள் என்று இந்திய அணியின் மூன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
 சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 11, 2024 • 10:02 AM

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அறிமுக வீரர் யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 11, 2024 • 10:02 AM

மேற்கொண்டு விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர் வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் இடம்பிடித்துள்ளனர். 

Trending

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 5ஆம் வரிசை வீரர் யார் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள கேஎல் ராகுல் ஒருபக்கமும், தனது அறிமுக டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் மற்றொரு பக்கமும் உள்ளதால் இவர்களி யாருக்கு பிளேயிங் லெவனில் வய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகம் வழுத்துள்ளது. 

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரில் யார் விளையாடுவார் என்ற தனது கணிப்பினை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியுப் வாயிலாக பேசுகையில், “சத்தியமாக, சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் இது நடக்கும். நீங்கள் நன்றாக விளையாடியிருப்பீர்கள், ஆனால் ஒரு பெரிய வீரர் திரும்பும்போது, ​​உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

உதாரணமாக, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்கிறார்கள். மேலும் இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மனதில் வைத்தே இந்த அணியை தேர்வு செய்துள்ளதாக நினைக்கிறேன். அதன்படி கேஎல் ராகுல் ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் அனுபவ வீரரான கேஎல் ராகுல் கடைசியாக இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், அதன்பின் காயம் காரணமாக அத்தொடரின் பாதியிலேயே விலகினார். கேஎல் ராகுல் விலகியதை அடுத்து அறிமுக வீரரான சர்ஃப்ராஸ் கானிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்ததுடன், தனது வாய்ப்பினை அவர் சிறப்பாக பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement