Advertisement
Advertisement
Advertisement

ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!

எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 17, 2024 • 19:34 PM
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன்படி இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதேசமயம் லீக் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து ரசிகர்களின் இதயத்தை நொருக்கியது. 

இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். வங்கதேச அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு மேற்கொள்ளபட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைவே உலகக்கோப்பை தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார். 

Trending


இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஹர்த்திக் பாண்டியா வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதும் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் குறித்தும், அதற்காக மேற்கொண்ட சிகிச்சைகள் குறித்தும் ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கடந்த ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனாது துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின் போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன். ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement