Advertisement

நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!

ஓப்பனிங் மற்றும் தமக்கு பிடிக்காத 3ஆவது இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும், தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுப்போம் எனவும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 03, 2024 • 11:07 AM
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கேப் டவுன் நகரில் நடைபெறுகிறது. இத்தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

அதனால் குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் சுமாராக விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Trending


அதை விட 2023 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த இளம் வீரர் ஷுப்மன் கில் அந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வருடங்களாகியும் இன்னும் 30 என்ற சுமாரான சராசரியை கூட தாண்ட முடியாமல் தடுமாறி வருவதால் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கினாலும் டெஸ்ட் போட்டிகளில் 3ஆவது இடத்தில் தான் ஷுப்மன் கில் விளையாட விரும்புவதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இருப்பினும் ஓப்பனிங் மற்றும் தமக்கு பிடிக்காத 3ஆவது இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிவிக்கும் அவர் தொடர்ந்து கில்லுக்கு ஆதரவு கொடுப்போம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஓப்பனிங் மற்றும் 3ஆவது இடத்திற்கு இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சில நேரங்களில் ஒரு இன்னிங்ஸில் தொடக்க வீரர் காயமடைந்தால் அல்லது அவுட்டாகி சென்றால் 3வதாக வருபவர் தொடக்க வீரராக 2ஆவது பந்தை எதிர்கொள்ள வேண்டும். எனவே வித்தியாசமான இடங்களில் விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

மிகவும் சாதுரிய வீரரான கில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடியுள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது இடத்தில் அவர் விளையாட விரும்புகிறார். பொதுவாக நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன். ஏனெனில் ஒன்று நீங்கள் தொடக்க வீரராக விளையாட வேண்டும் அல்லது 5, 6 போன்ற மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். நான் துவக்க வீரராக வந்ததிலிருந்து 3 முதல் 7 வரையிலான இடங்கள் யாருக்குமே சரியாக இருக்கும் என்று கருதவில்லை” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement