
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ஜோ ரூட், “என்னைப் பற்றி எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் கடைசி டெஸ்ட் போட்டி வரை நான் இருக்க விரும்பும் இடத்திற்கு கீழே தான் இருந்தேன். நான் இத்தொடரில் ரன்களை குவிக்க தடுமாறினே. மேலும் இத்தொடரில் என்னால் எதிர்பார்த்த அளவு பங்களிப்பை வழங்க முடியவில்லை. அதேசமயம் இந்தியா எப்போதும் நான் பேட்டிங் செய்ய விரும்பும் ஒரு இடமாக இருந்துள்ளது.