Advertisement
Advertisement
Advertisement

தொடக்க வீரர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித்; ரசிகர்கள் அதிருப்தி!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் உங்களுடன் ஓபனர் யார்? கில்லா, இஷான் கிஷனா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2023 • 19:57 PM
I have not decided to give up the format: Rohit Sharma on his T20I future
I have not decided to give up the format: Rohit Sharma on his T20I future (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியை பெற்றன.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் துவங்கி நடைபெற்ற நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசி அணி 200+ ரன்களை கடப்பதை உறுதி செய்தார். இறுதியில் இந்தியா மெகா வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

Trending


மூன்று ஒருநாள் போட்டிகளும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் கௌகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் மதியம் 1:30 மணிக்கு நடைபெறும். இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.

அதேசமயம் ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் போன்றவர்களும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கு முன், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, இனி நீங்கள் டி20 அணியில் விளையாட மாட்டீர்களா? என நிரூபர் கேட்ட கேள்விக்கு, “இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுபவர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாது. ஓய்வு தேவை. அவ்வளவுதான். அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இருக்கிறது. மேலும், ஐபிஎல் முடிந்தும் பல டி20 தொடர்கள் இருக்கிறது. இப்போது பார்த்துக்கொள்ளலாம்.

ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன். நிச்சயம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். அவ்வபோது ஓய்வு எங்களுக்கு முக்கியம். ஆகையால், ஓய்வில் இருந்தால், இனி டி20 தொடர்களில் விளையாட மாட்டோம் என அர்த்தம் இல்லை” என்று தெரிவித்தார்.

 

அதன்பின் நாளைய போட்டியில் உங்களுடன் ஓபனர் யார்? கில்லா, இஷான் கிஷனா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, ‘‘ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என நினைக்கிறோம். நாளை அவர்தான் களமிறங்குவார்’’ எனத் தெரிவித்தார். இஷான் கிஷன் சமீபத்தில், வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து, முரட்டு ஃபார்மில் இருக்கும் நிலையில், அவரை புறக்கணித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement