
பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி அடுத்தாடுத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை ஈட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “பல்வேறு டி20 தொடர்களால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை ரசிகர்களிடையே இழந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசி வரும் பொதுவான கருத்து எனக்கு பிடிக்கவில்லை. அதனால் போட்டியை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற வேண்டும் என நினைத்தேன். டெஸ்ட் கிரிக்கெட் தாண்டி பல்வேறு வீரர்களுக்கு பல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் பிடிக்கும்.