
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக இளம் வீரர்களை வைத்து புதிய அணியை கட்டமைக்கப்பட்டு அந்த அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு புதிய நம்பிக்கையை பிசிசிஐ வீரர்களிடையே விதைத்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இவ்வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரினை ரிங்கு சிங்கிற்காகவே தான் பார்த்து வருவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.