Advertisement

விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2024 • 14:09 PM
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்! (Image Source: Google)
Advertisement

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானை மிகவும் எளிதாக தோற்கடித்துள்ளது.

முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார்.

Trending


மறுபுறம் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஷிவம் தூபே 63 ரன்கள் விளாசி 15.3 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடினேன். குறிப்பாக விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணமாகும். அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது கௌரவமாகும். அவரிடம் நான் நிறையவற்றைக் கற்றுக் கொள்ளலாம். நாங்கள் சேர்ந்து பேட்டிங் செய்யும் போது எங்கே அடிக்கலாம் என்பது பற்றி பேசினோம்.

பின்னர் லாங் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைக்கு மேல் எளிதாக அடிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்து அடித்தோம். அந்த வகையில் எங்களுடைய அதிரடியாக விளையாடும் எண்ணம் நேர்மறையாக இருந்ததால் நாங்கள் நல்ல ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தோம். களத்திற்கு சென்று என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அணி நிர்வாகம் என்னிடம் சொன்னார்கள்.

வலைப் பயிற்சிகளில் கடினமாக உழைக்கும் நான் இது போல் கிடைக்கும் வாய்ப்புகளில் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க விரும்புகிறேன். இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்த போது இரண்டாவதாக பேட்டிங் செய்த முடிவு நல்லதாக அமைந்தது” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement