
'I Will Be There When The IPL Resumes' Says Shreyas Iyer (Image Source: Google)
ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயமடைந்தது.
அவரது காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2021 சீசனில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ரிஷாப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடியது. அதில் 8 போட்டிகளில் 6-ல் வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.