
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், தென் ஆஅப்பிரிக்காவிடம் தோற்றது.
இதுவரை விளையாடி 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும். இந்த போட்டியிலும் வென்று, நெதர்லாந்தையும் கடைசி போட்டியில் வீழ்த்தினால் வலுவாக அரையிறுதிக்கு செல்லும்.
அடிலெய்டில் நடக்கும் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. தீபக் ஹூடாவிற்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.