
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் உலகில் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளது இந்திய அணி.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 115 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த போட்டியில் இந்தியா பந்து வீசியபோது, ஸ்பின் பவுலிங்கிற்கு மட்டுமே 16 விக்கெட்டுகள் கிடைத்தன. ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் ஐசிசி பவுலர்களுக்கான தர வரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.