
ஐசிசி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி பெயர் பெற்றவர் ஷிகர் தவான். இவர் பல்வேறு ஐசிசி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் என்ற பெருமை அவருக்கு சொந்தமானது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 22 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி 688 ரன்கள் அடித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொதப்பியதன் காரணமாக அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இதனை அடுத்து இஷான் கிஷன், கில் ஆகியோர் இரட்டை சதம் அடித்த நிலையில் ஷிகர் தவான் தன்னுடைய இடத்தை இழந்தார்.
இதனால் வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் பங்கேற்பதில் சந்தேகமாக இருந்தாலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.