
ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர ஷார்ஜா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய துபாய் அணியில் ராபின் உத்தப்பா 3 ரன்களிலும், அடுத்து வந்த சிராக் சூரி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - லாரன்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோ ரூட் அரைசதம் கடந்தார். பின் 34 ரன்களில் லாரன்ஸும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 80 ரன்களைச் சேர்த்திருந்தார்.