-mdl.jpg)
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 103 ரன்களையும், ஷுப்மன் கில் 52 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்களையும், கேஎல் ராகுல் 34 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநயாகன் விருதையும் வென்றார்.