Advertisement

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் நான் மீண்டும் வருகிறேன் - வாஷிங்டன் சுந்தர்!

லங்காஷயரில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது, மேலும் எனது சுயத்தைப் பற்றியும் எனது ஆட்டத்தைப் பற்றியும் எனக்குப் புரிய வைத்தது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 18, 2022 • 17:04 PM
IND V NZ: County Stint With Lancashire Gave Me Understanding Of Myself And My Game, Says Washington
IND V NZ: County Stint With Lancashire Gave Me Understanding Of Myself And My Game, Says Washington (Image Source: Google)
Advertisement

இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் நடக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி,கேஎல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் விளையாடவில்லை. ஜடேஜா, பும்ரா காயத்தால் ஆடவில்லை. 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடரில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் பவுலிங்கை பொறுத்தமட்டில் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Trending


ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில், முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் வெலிங்டனில் மழை பெய்ததால் காத்திருக்கப்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு மேலும் மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில் பேசிய வாஷிங்டன் சுந்தர், “நான் என்சிஏவில் நிறைய நேரம் செலவிட்டேன், நான் லங்காஷயர் அணிக்காக விளையாடியபோது என் தோள்பட்டையில் வேலை செய்தேன். நான் என் உடல் மற்றும் திறமையிலும் வேலை செய்தேன். லங்காஷயரில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது, மேலும் எனது சுயத்தைப் பற்றியும் எனது ஆட்டத்தைப் பற்றியும் எனக்குப் புரிய வைத்தது. எனவே, அங்கு இரண்டு மாதங்கள் நன்றாக இருந்தது. தற்போது, இந்தத் தொடருக்காக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்.

நியூசிலாந்து எனக்கு மிகவும் பிடித்த மற்றும் அழகான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் மிகவும் நட்பானவர்களாகவும், நேர்மையாக இருக்க இனிமையாகவும் இருக்கிறார்கள். நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் நான் மீண்டும் வருகிறேன், அதற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement