
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த அக்சர் பட்டேல், சூரிய குமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
6 சிக்ஸர் விளாசிய அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு அரை சதம் அடிக்க சிவம் மவி 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இருந்தும் இந்த போட்டிகள் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , “டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் இப்போது ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பி இருக்கிறோம். சிவம் மவி போன்ற வீரர்கள் இப்படி விளையாடும் போது உங்கள் முகத்தில் மகிழ்ச்சியில் சிரிப்பு வந்துவிடும். அக்சர்பட்டேல் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்.