
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் கேல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே நிதானா ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, அவ்வபோது பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
பின் 20 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில், தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சற்று நேரத்திலேயே கேல் ராகுல் 22 ரன்களுக்கு கலித் அஹ்மத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் புஜாராவுடன் இணைந்து விராட் கோலி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.