
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் இடத்தை வலுப்படுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா விரும்புகிறார். மறுபுறம், இந்த தொடரில் ரோஹித் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதன்படி, வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார்.
தற்போது 37 வயதான ரோஹித் சர்மா இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்ஸர்களை அடித்துள்ளார், மேலும் அவர் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் வரிசையில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.