
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி இன்று தொடங்கியது.
இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணிக்கு தான் இது முக்கிய போட்டியாகப்பார்க்கபட்டது. காரணம் , டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல், ஒருநாள் சாம்பியன்ஷிப புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 11ஆவது இடத்தில் உள்ளது. முதல் 8 இடங்களை பிடிக்கும் அணியே, நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
இதனால், தென்னாப்பிரிக்க அணி தகுதி சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய வெற்றி தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், அருண் ஜெட்லி மைதானம் ஈரப்பதத்துடன் காட்சி அளித்தது. மைதானத்தில் ஆங்காங்கே இருக்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் டாஸ் மதியம் 1.40 மணிக்கு தான் வீசப்பட்டது.