
ஐபிஎல் 2022 தொடர் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்தியா தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரும் ஜூன் 9ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அவருக்கு பதில் கேஎல் ராகுல் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக், அர்ஷிதீப் சிங், உம்ரான் மாலிக், குல்டீப் யாதவ், யுஸ்வென்ற சஹால் போன்ற வீரர்கள் இந்தியாவின் வெற்றிக்காக களமிறங்குகின்றனர்.
அதே போல் ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் கம் பேக் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் துவங்கும் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.