
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரிகள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி இணை எதிரணி பந்துவீச்சாளர்களை தங்களது அபாரமான பேட்டிங்கால் திணறவைத்தனர். இதில் ஒருமுனையில் விராட் கோலி அரைசதத்தைக் கடக்க, மறுமுனையில் ஷுப்மன் கில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.