
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரராக தில்சன் மதுஷங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.