
இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இந்தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் மற்றும் டி20 தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண வீரராக விளையாட உள்ளார்.
மேலும் இந்த அணியில் இளம் வீரர்கள் ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா போன்றருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ருதுராஜ் கெய்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள வேளையில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.