
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் டிக்ளர் செய்தது. இறுதியாக இந்திய அணியை விட 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
444 ரன்கள் இலக்கை துரத்தியபோது, கில் 18 ரன்கள், ரோஹித் சர்மா 43 ரன்கள் மற்றும் புஜாரா 27 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்து 71 ரன்கள் சேர்த்தனர். இதனால் 4ஆம் நாள் முடிவில் 164/3 என உள்ளது. இந்திய அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் இருக்கிறது.