
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியது. அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் அறிவித்தார். இதனையடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இருப்பினும் அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் கௌதம் கம்பீரின் ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்தியாவுக்கு உதவும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரெட் லீ, “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தியதுடன் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்ததே அதற்கு சிறந்த உதாரணமாகும்.