
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்..
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார், ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஷர்தூல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் கவனத்தை ஈர்க்க தவறிவுள்ளனர். இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார்.