
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ஷுப்மன் கில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் இந்திய வீரர் விராட் கோலி 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்தார். இதனால் அவர் 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித்ச் சர்மா 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களில் நுழைந்துள்ளனர்.