
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம்.
மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ஏனெனில் தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பொறுப்பு வகித்து வருகிறார். தற்சமயம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழல் காரணமாக இந்திய அணி இனி எந்த தொடர்களிலும் பாகிஸ்தானுடன் விளையாடாது என்ற முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் தான் தற்சமயம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலிருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.